ஞாயிறு, 13 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்..(part.11)

                                               அந்த நாள்.. ஞாபகம்..(part.11)

                                                   அடி ஒவ்வொன்னும்  இடி
                                                 --------------------------------------------

                      அன்று காலை வீட்டுக்கு சற்றுதொலைவில்   வெளியே என்  பெரியப்பா என்னை கூப்பிட்டு 11 மணி  சினிமா பாக்க  வரையா என கூப்பிட சரி அம்மாட்ட சொல்லிட்டு வருகிறேன் என்றேன் .சும்மா ...வா  நான் சொல்லிகிறேன் என கூறி கூட்டிபோனார் .காலைக்காட்சி டிக்கெட் கிடைக்கவில்லை .சரி சாப்பிட்டுவிட்டு மதியம் போலாம் என இருக்கவைக்க ..........விளையாடிட்டு இருந்தவன காணவில்லை என வீட்டில் தேட ஆரம்பித்தார்கள் .(பெரியப்பா வீட்டுக்கு  தகவல் சொல்ல மறந்துபோனார்  ).
மதியம் படம்  பார்த்துவிட்டு சந்தோசமாய் வீட்டுக்கு வந்தால் எங்கள் தெருவே வெளியில் வந்து கூடி இருந்தது .தெரு முனையில் கொலைவெறியுடன் என்  தாத்தா .....நிற்பதும் ,அருகில் என் குடும்பத் தினர் கண்ணீருடன் வருவதும் தெரிய விபரீதம் உரைத்தது .(போலீஸ்  ஸ்டேஷன் போய்  கம்ப்ளைன்ட் பண்ண கிளம்பிட்டங்கியா   ... கிளம்பிட்டாங்க .........!!!.).எங்கடா  போன என தாத்தா  கேட்க ....சினிமாவுக்கு.... என முடிப்பதற்குள் இடியென அடி .......ஆத்திரம் தீர  வீட்டு வாசல் வரைக்கும் அடி .......வஞ்சகமே இல்லாமல் விழுந்தது .தப்பு என்மேல் என்பதால் வாங்கிக்கொண்டு நின்றேன் .... "அடிவாங்கி கிட்டே நிக்கிற ஓடுடா"   என சொன்ன அம்மாவின் சப்தம் காதில் ஏறவில்லை (தப்பு பண்ணா  அடிவாங்கனும் ....மீறி ஓடினா  அதுக்கு தனி அடி அம்மாவிடம்  கிடைக்கும் ....அந்த  பழக்கம் ).பின் யாரோ என்னை விடுவித்து கூட்டிபோனதாய் நியாபகம் .கோபம் ,இயலாமை, தவறு செய்துவிட்டோம் எண்ற  குற்ற உணர்வு ..... ரோட்டில் எல்லோர் முன்னாலும் அடிவாங்கின அவமானம் ...........அன்று சாப்பிடமல் அழுதுகொண்டே தூங்கிபோனேன் .தாத்தா  மேல் ஆத்திரம் அதிகமாய் வந்தது .இரவு தாத்தா  பிரியாணி பொட்டலத்துடன் வந்துகண்ணீருடன்  சமாதானம் செய்தார் ."கடைக்கு போனவன் சாயங்காலம் வரை காணோம்னா நான் என்ன்னன்னுடா நெனைக்கிறது "-----என கண்கள் பனிக்க தலுதளுதார் .அவரது ஒவ்வொரு அடியும் என் மேல்  கொண்ட பாசத்தின் அளவீடு என்பது  பின்னாளில் தான் அனுபவத்தில் உணரமுடிந்தது .உணர வைத்த என் தாத்தாவுக்கு என் நினைவாஞ்சலி .ஞாபகங்கள் தொடரும் ............@கல்யாண் ராஜன் .
          




                                                    

சனி, 5 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்..(part-9)

                                                 அந்த நாள்.. ஞாபகம்..(part-9)

                                    புதைக்கும்போது கத்திய என் சின்ன பாட்டி                               



                                              அன்று ஒரு நாள் என் தாய்வழி சின்ன பாட்டி  வருடகணக்கில் பக்கவாதத்தில் படுத்தவர் இறந்தார் .காரியம் எல்லாம் முடித்து  பேரன்கள் நாங்கள்  ஆட்டபாட்டதுடன் மயானம் தூக்கி சென்றோம் .ஏற்கனவே சுடுகாடு என்றால் கொஞ்சம் பயம் தான் (நல்லவேளை இரவு இல்லை).பாடையை கீழே வைத்து விட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று முடிந்தது .பாட்டியின் உடலை உள்ளே வைக்க எண்ணி  பெரியவர் ஒருவர் "வாங்கப்பா ...பேரன்களா  வந்து தூக்கி வையுங்க என்றதும்  நானும் எனது தம்பி,மற்றும் மாப்பிளைகள் இரண்டுபேரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கி குழிக்குள் வைக்கும் முன் .................
............................................................."..ஹ்ஹ்ஹ்ஹூஊஒ  'என்ற சப்தம் பாட்டியின் வாயிலிருந்து கெட்ட  நாற்றத்துடன் பயங்கர சப்தம் பெரிதாய் வர .........அப்படியே தொப்பென போட்டுவிட்டு 4 பேரும் குப்பென வேர்க்க .......... ஓடினோம் ஓட்டம் ........புளிதி பிடரியில் பட ....!!!!!அன்று தான் பயத்தில் தொடை "என்னை மீறி "நடுங்கியதை உணர்ந்தேன் !!!!(யோசிச்சு பாருங்கள் ...பாட்டிக்கு எத்துபல் வேறு ....பிணமாய் கத்தினால் எப்படி இருக்கும்).......என்ன என்ன என்று அனைவரும் ஓடிவந்து எங்களை பிடித்து கேட்க பயத்தில் உளறி உளறி சொல்ல .....பெருசுகள் சிரித்தார்கள் .விவரமான ஒருத்தர்சொன்னார் ... வயத்தில் உள்ள காற்று.. பசங்க தூக்கினதும் அமுங்கி ...ப்ரசெர்ல வரும்போது வாய் வழியா  சத்தம்  வரும் .....பயப்படாம தூக்கி குழியில் வைங்க என்றார். .அப்பாடா  என்று ஒருவழியாக  குழியில் வைத்தோமா .......நாங்களும் பிழைத்தோம் .பாவம் என்  மாப்பிள்ளை ஒருவன்தான் முகம் அருகில் இருந்து  தூக்கியதால் காற்று முகத்தில் பட்டு நாற்றம் பொறுக்கமுடியாமல் வாந்தி பண்ணிக்கொண்டு இருந்தார் .இப்போதும்  சுடுகாடு வழியாக  போனால் இந்த ஞாபகம் தான் முதலில் வரும் .  உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் ...பகிருங்கள் .   @கல்யாண் ராஜன் .

புதன், 2 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-8)

 அந்த நாள்.. ஞாபகம்...(part-8)


                                                  ஸ்கைலாப் ராக்கெட் 
                                                 .................................................
                                                                           

                                 முன்பு 1980 க்கு முந்தய  காலத்தில் ஸ்கைலாப் என்றொரு  ராக்கெட் வந்தது நினைவிருக்கிறதா... பலரும் மறந்திருக்கக் கூடும். ஸ்கைலாப் என்ற ஆயுள் தீர்ந்துபோன ராக்கெட் பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய கடலோரம் மோதப் போவதாகவும், அதனால் மனித இனமே இருக்காது என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.அவ்வளவுதான்... அதுவரை நீடித்து வந்த பகைகள் நட்பாகின... கஞ்சர்கள் வள்ளல்களானார்கள்... தோட்டத்தில் மேய்ந்த மாடுகளுக்காக பஞ்சாயத்து கூட்டியவர்கள், பட்டியோடு மாட்டை மேய்ச்சிக்கய்யா என தாராளம் காட்டினர்... கூடாத காதல்கள் கூடின... பெரிசுகள் கண்டு கொள்ளாமல் போக ஆரம்பித்தனர். கிராமம் தோறும் பொதுவிருந்து நடத்தி, ஆட்டுக் கறிக் குழம்பும்  சோறும் போட்டனர். அவ்வளவு ஏன், சினிமா கொட்டகைகளில் டிக்கெட்டுக்கு பணம் இல்லேன்னாலும் பரவால்ல போய் பாருய்யா என்றார்கள்... மற்ற மாநிலங்களில் எப்படியோ... மதுரையில்  இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... இலங்கை வானொலி லைவ் டெலிகாஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தது ......எல்லோரும் தத்தமது குடும்பத்தாருடன் தமது வீட்டுக்குள் முடங்கி ஒன்று கூடினர் .இன்னும் ஒருமணி நேரத்தில் ராக்கெட் விழ இருபதும் நினிடதிற்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டது .....30....நிமிடம்....20...10.....5......என நிமிடங்கள் கரைந்தோட டென்சன் எகிறியது .........எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன .........4....3...2...1 நிமிடத்தில் விழும் ...என சொன்ன அறிவிப்பாளர் குரல் கூட தளுதளுத்து ....!!!!அந்தகடைசிஒருநிமிடம்எங்கும்நிசப்தம்...............................................................................................................................................>
  பின் .....ரேடியோ அறிவிப்பாளரின் சந்தோஷ சிரிப்பு குரல் கேட்டது .....ஸ்கைலாப் ராக்கெட் இந்து மகா சமுத்திரத்தில் சுமார் 250 கடல் மைல் தூரத்தில் விழுந்தது  என அறிவிப்பு செய்தார் .எந்த அழிவும் நேராமல் தப்பினோம் அனைவரும் !!!!!!!.    மறக்க முடியுமா அந்த நாளை ??????.
உங்களில் யாருக்கேனும் இந்த அனுபவம் இருந்தால் ....பகிருங்கள் .
@கல்யாண் ராஜன் .

ஞாயிறு, 29 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-7)

 அந்த நாள்.. ஞாபகம்...(part-7)
                                                    
                                         

                                            ​​​​​​​​​​​​​​​​         பூனை மீசை வயது

                                               அது ஒரு இரண்டும்கெட்டான் பருவம் ....ஒன்பதாம் வகுப்பின் சரித்திர பாடம் எடுக்கும் இளம் ஆசிரியை வழக்கமாக பாடம் எடுத்து கொடிருக்க ,நான் இப்போ அப்போ வென விழ தயாராய் இருந்த முன் பல்லை நாவினால் ஆட்டிக்கொண்டே கவனித்து கொண்டிருந்தேன் .என்ன தோன்றியதோ அந்த ஆசிரியை பாடம் எடுப்பதை சற்று நிறுத்தி என்னை முறைத்து விட்டு தொடர்ந்தார் .மேலும் இரண்டு முறை இது தொடர்ந்தது .மூன்றாம் முறை .....முறைத்தவர் .....அருகில் வந்து  கன்னத்தில் விட்டார் ஒரு அறை .எனக்கு ஒன்றும் புரியவில்லை ,இவர் ஏன் இப்படி கோபத்துடன் முறைத்தார் ...இப்போது அடிக்கவேறு செய்கிறார் ?....அவமானம் மற்றும் கண்ணீருடன் கன்னத்தில் கைவைத்து ஏன் டீச்சர் அடிகிறிர்கள் என கேட்க .....ஏன் அடிச்சேன்னு உனக்கு தெரியல? உட்கார் என்றார் கோபத்துடன் .சில வினாடிகளில் நாக்கில் ரத்த சுவை உரைக்க ...ஆடிகொண்டிருந்த பல் விழுந்திருந்தது .!டீச்சர் அருகில் பயந்தபடி போய் "பல் விழுந்திருச்சு " என்றதும் ......அவருக்கு அப்போதுதான் உரைத்தது .பல் ஆடிச்சா ..அதான் அப்படி உதடு குவித்து பல் ஆட்டிகிட்டு இருந்தயா ?எனக்கேட்டு மிக வருத்தப்பட்டு ,நல்ல பையந்தண்டா நீ என கூறி ........மன்னிப்பும் கேட்டார் .என் செய்கை அவருக்கு "முத்த" சைகையாக தவறுதலாக கவனிக்கப்பட்டது தான் அந்த அடிக்கு காரணம் என்று பின்னர் நண்பர்கள் தெளிவாக்கிய பின் தான் புரிந்தது .பத்து நாள் கழிச்சு விழ வேண்டிய பல் அடிச்ச  அடியில் சட்டென விழுந்தது ஒன்று தான் அன்றைய சிறப்பான பலன் .
உங்களுக்கும் இதுபோல் நினைவு அலை தோன்றினால் பகிருங்களேன் .!!!!
@கல்யாண் ராஜன் .



வியாழன், 26 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-6)

                                                    அந்த நாள்.. ஞாபகம்...(part-6)
                                

                                                    பள்ளிகூட இடைவேளை

                                                                          













                                         அப்பாடா .......15 நிமிடம் நிம்மதி ...என பள்ளிவிட்டு வெளி வந்து சந்தோசமா பொட்டிக்கடையில் தஞ்சம் புகும் நேரம் சொர்கத்தின் ஒரு பகுதி .அந்த நாட்களில் சாக்லேட் ,5 ஸ்டார் ,கிட்கேட் ,,,etc ...கிடையாது .உடல் ஆரோக்கிய கடலை மிட்டாய் ,கோகோ மிட்டாய் ,தேன் மிட்டாய் ,மாங்காய் ,நெல்லிக்காய் ,புளி உருண்டை .......பொறி உருண்டை .......ஜிகேர்தண்டா ....என கிடைக்கும் பாக்கெட் மணிக்கு தகுந்தாற்போல் நொறுக்குவதில் ...........உள்ள சுகமே அலாதி !!!! நெல்லிக்காய் கடித்து அதை அறைவட்டமாக மாற்றும் திறமைசாலிகள் பலர் உண்டு .சவ்வரிசி ஐஸ் கடித்து நண்பனுடன் பகிர்ந்த நிமிடங்கள் இன்றும் மனதில் நீங்கவில்லை .அப்போதே அந்த பொட்டிகடைகளில் acount வைத்த திறமைசாலி பசங்கள் ........ஜாமின்றி பாக்ஸ் இல் இருந்து மாங்காய் கடித்து தெரியாமல் கொடுத்த பெண் தோழிகள் .......பசி பொறுக்காமல் மதிய உணவுக்கு முன்பே டிபன் பாக்ஸ் திறந்து தின்று வாசனை காட்டிகொடுத்து மாட்டி  அடி வாங்கின நாட்கள் .......அந்த நாள் ஞாபகம் ....நெஞ்சிலே வந்ததே .........என பாடதோன்றும் ......நாவில்  அந்த இனிப்பு சுவை ஜொல்லோடு .........!!!!!!  உங்களுக்கு இது நடந்து இருந்தால் பகிருங்களேன் . @கல்யாண் ராஜன் .

திங்கள், 23 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்.......5

அந்த நாள்.. ஞாபகம்.......5
                                              சனி நீராடு 
 

         நம் தந்தை காலம் வரை சனிகிழமை என்னை குளியல் பார்த்திருப்போம் .நமக்கு அதற்கான நேரம் கிடையாது .ஆனால் அதன் பலன் மிக அதிகம் . இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல்.  ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.

        மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.

உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
எண்ணெய்க் குளியலின் பலன்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு.( இப்போதும் என் தாத்தாவின் சாவகாசமான என்னைகுளியல் கண் முன் நிழலாடும் .இதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்

                                                   --