சனி, 5 ஜூலை, 2014

அந்த நாள்.. ஞாபகம்..(part-9)

                                                 அந்த நாள்.. ஞாபகம்..(part-9)

                                    புதைக்கும்போது கத்திய என் சின்ன பாட்டி                               



                                              அன்று ஒரு நாள் என் தாய்வழி சின்ன பாட்டி  வருடகணக்கில் பக்கவாதத்தில் படுத்தவர் இறந்தார் .காரியம் எல்லாம் முடித்து  பேரன்கள் நாங்கள்  ஆட்டபாட்டதுடன் மயானம் தூக்கி சென்றோம் .ஏற்கனவே சுடுகாடு என்றால் கொஞ்சம் பயம் தான் (நல்லவேளை இரவு இல்லை).பாடையை கீழே வைத்து விட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று முடிந்தது .பாட்டியின் உடலை உள்ளே வைக்க எண்ணி  பெரியவர் ஒருவர் "வாங்கப்பா ...பேரன்களா  வந்து தூக்கி வையுங்க என்றதும்  நானும் எனது தம்பி,மற்றும் மாப்பிளைகள் இரண்டுபேரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கி குழிக்குள் வைக்கும் முன் .................
............................................................."..ஹ்ஹ்ஹ்ஹூஊஒ  'என்ற சப்தம் பாட்டியின் வாயிலிருந்து கெட்ட  நாற்றத்துடன் பயங்கர சப்தம் பெரிதாய் வர .........அப்படியே தொப்பென போட்டுவிட்டு 4 பேரும் குப்பென வேர்க்க .......... ஓடினோம் ஓட்டம் ........புளிதி பிடரியில் பட ....!!!!!அன்று தான் பயத்தில் தொடை "என்னை மீறி "நடுங்கியதை உணர்ந்தேன் !!!!(யோசிச்சு பாருங்கள் ...பாட்டிக்கு எத்துபல் வேறு ....பிணமாய் கத்தினால் எப்படி இருக்கும்).......என்ன என்ன என்று அனைவரும் ஓடிவந்து எங்களை பிடித்து கேட்க பயத்தில் உளறி உளறி சொல்ல .....பெருசுகள் சிரித்தார்கள் .விவரமான ஒருத்தர்சொன்னார் ... வயத்தில் உள்ள காற்று.. பசங்க தூக்கினதும் அமுங்கி ...ப்ரசெர்ல வரும்போது வாய் வழியா  சத்தம்  வரும் .....பயப்படாம தூக்கி குழியில் வைங்க என்றார். .அப்பாடா  என்று ஒருவழியாக  குழியில் வைத்தோமா .......நாங்களும் பிழைத்தோம் .பாவம் என்  மாப்பிள்ளை ஒருவன்தான் முகம் அருகில் இருந்து  தூக்கியதால் காற்று முகத்தில் பட்டு நாற்றம் பொறுக்கமுடியாமல் வாந்தி பண்ணிக்கொண்டு இருந்தார் .இப்போதும்  சுடுகாடு வழியாக  போனால் இந்த ஞாபகம் தான் முதலில் வரும் .  உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் ...பகிருங்கள் .   @கல்யாண் ராஜன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக