வியாழன், 26 ஜூன், 2014

அந்த நாள்.. ஞாபகம்...(part-6)

                                                    அந்த நாள்.. ஞாபகம்...(part-6)
                                

                                                    பள்ளிகூட இடைவேளை

                                                                          













                                         அப்பாடா .......15 நிமிடம் நிம்மதி ...என பள்ளிவிட்டு வெளி வந்து சந்தோசமா பொட்டிக்கடையில் தஞ்சம் புகும் நேரம் சொர்கத்தின் ஒரு பகுதி .அந்த நாட்களில் சாக்லேட் ,5 ஸ்டார் ,கிட்கேட் ,,,etc ...கிடையாது .உடல் ஆரோக்கிய கடலை மிட்டாய் ,கோகோ மிட்டாய் ,தேன் மிட்டாய் ,மாங்காய் ,நெல்லிக்காய் ,புளி உருண்டை .......பொறி உருண்டை .......ஜிகேர்தண்டா ....என கிடைக்கும் பாக்கெட் மணிக்கு தகுந்தாற்போல் நொறுக்குவதில் ...........உள்ள சுகமே அலாதி !!!! நெல்லிக்காய் கடித்து அதை அறைவட்டமாக மாற்றும் திறமைசாலிகள் பலர் உண்டு .சவ்வரிசி ஐஸ் கடித்து நண்பனுடன் பகிர்ந்த நிமிடங்கள் இன்றும் மனதில் நீங்கவில்லை .அப்போதே அந்த பொட்டிகடைகளில் acount வைத்த திறமைசாலி பசங்கள் ........ஜாமின்றி பாக்ஸ் இல் இருந்து மாங்காய் கடித்து தெரியாமல் கொடுத்த பெண் தோழிகள் .......பசி பொறுக்காமல் மதிய உணவுக்கு முன்பே டிபன் பாக்ஸ் திறந்து தின்று வாசனை காட்டிகொடுத்து மாட்டி  அடி வாங்கின நாட்கள் .......அந்த நாள் ஞாபகம் ....நெஞ்சிலே வந்ததே .........என பாடதோன்றும் ......நாவில்  அந்த இனிப்பு சுவை ஜொல்லோடு .........!!!!!!  உங்களுக்கு இது நடந்து இருந்தால் பகிருங்களேன் . @கல்யாண் ராஜன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக