அதிகாலை மார்கழி குளிர் .
---------------------------------------
காலை மூன்று மணிக்கு மேலே மார்கழி மாசம் அடிக்கும் குளிரை அனுபவித்து இருக்கிறீர்களா ? சிறிய தீ வளர்த்து குளிர் காயும் சுகம் தெரியுமா உங்களுக்கு? அனுபவித்தால் தெரியும் அதன் சுகம் !!!.அன்றைய வயதில் தெருவில் உள்ள நண்பர்களுடன் பழக எனக்கு பெற்றோர் தடை உண்டு .(கண்டபசன்களோட சேர்ந்தா கெட்டு போவனாம் ). அந்த மார்கழி குளிருக்கு அங்குள்ள என் வயது பசங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து அங்குள்ள WORKSHOP கழிவு துணிகளை (கிரீஸ் .DEISEL ,துடைத்த தீ பற்ற கூடியது . )சேகரித்து வந்து வட்டமாய் அமர்ந்து அதை எரித்து சுகமாய் குளிர் காய்வார்கள் .துணி பொறுக்கி வரதவர்க்கு அங்கே அனுமதி இல்லை .என்னால் அந்த நண்பர்களை நான் சற்று தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .(அப்பா திட்டுவாங்களே ).ஆனாலும் அவர்கள் என்னை அழைப்பார்கள் .......வாடா ..நீ கிரீஸ் துணியெல்லாம் பொறுக்கி தரவேண்டாம் ...சும்மா ஒக்கொந்துகோடா ....ஒன்னும் ஒன்னய சொல்லமாட்டோம் ..எங்க கூட நீ இருந்தாலே எங்களுக்கு சந்தோசம் என்பார்கள் .பெற்றோர் தடை அந்த அன்பில் உடைபட அருகில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் குளிர் காய்ந்து வருவேன் திருட்டுத்தனமாக .....இன்றும் அந்த அன்பையும் நட்பையும் கூதல் மார்கழியின் போது நினைத்தால் மனது பூரிக்கும் .மீண்டும் அந்தநாள் வராதா என என்னும் ......!!!!!!.
இன்றைய குழந்தைகள் இதை அறிவார்களா ?இல்லை அதற்க்கு நேரம் தான் இருகிறதா ? .....உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம் !பகிருங்கள் நண்பர்களே >>>>!. @கல்யாண் ராஜன் .
---------------------------------------
காலை மூன்று மணிக்கு மேலே மார்கழி மாசம் அடிக்கும் குளிரை அனுபவித்து இருக்கிறீர்களா ? சிறிய தீ வளர்த்து குளிர் காயும் சுகம் தெரியுமா உங்களுக்கு? அனுபவித்தால் தெரியும் அதன் சுகம் !!!.அன்றைய வயதில் தெருவில் உள்ள நண்பர்களுடன் பழக எனக்கு பெற்றோர் தடை உண்டு .(கண்டபசன்களோட சேர்ந்தா கெட்டு போவனாம் ). அந்த மார்கழி குளிருக்கு அங்குள்ள என் வயது பசங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து அங்குள்ள WORKSHOP கழிவு துணிகளை (கிரீஸ் .DEISEL ,துடைத்த தீ பற்ற கூடியது . )சேகரித்து வந்து வட்டமாய் அமர்ந்து அதை எரித்து சுகமாய் குளிர் காய்வார்கள் .துணி பொறுக்கி வரதவர்க்கு அங்கே அனுமதி இல்லை .என்னால் அந்த நண்பர்களை நான் சற்று தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .(அப்பா திட்டுவாங்களே ).ஆனாலும் அவர்கள் என்னை அழைப்பார்கள் .......வாடா ..நீ கிரீஸ் துணியெல்லாம் பொறுக்கி தரவேண்டாம் ...சும்மா ஒக்கொந்துகோடா ....ஒன்னும் ஒன்னய சொல்லமாட்டோம் ..எங்க கூட நீ இருந்தாலே எங்களுக்கு சந்தோசம் என்பார்கள் .பெற்றோர் தடை அந்த அன்பில் உடைபட அருகில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் குளிர் காய்ந்து வருவேன் திருட்டுத்தனமாக .....இன்றும் அந்த அன்பையும் நட்பையும் கூதல் மார்கழியின் போது நினைத்தால் மனது பூரிக்கும் .மீண்டும் அந்தநாள் வராதா என என்னும் ......!!!!!!.
இன்றைய குழந்தைகள் இதை அறிவார்களா ?இல்லை அதற்க்கு நேரம் தான் இருகிறதா ? .....உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம் !பகிருங்கள் நண்பர்களே >>>>!. @கல்யாண் ராஜன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக